யானை தமிழ்ப்பெயர்கள்
அஞ்சனாவதி, அரசுவா, அல்லியன், அறுபடை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, இருள், உம்பர், உம்பல் (உயர்ந்தது), உவா (திரண்டது), எறும்பி, ஒருத்தல், ஓங்கல் (மலைபோன்றது), கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்), கயம், கரி (கரியது), கரேணு, கள்வன் (கரியது), களிறு, கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது), குஞ்சரம் (திரண்டது), கும்பி, கைம்மலை (கையை உடைய மலை போன்றது), கைம்மா (துதிக்கையுடைய விலங்கு), சிந்துரம், தந்தாவளம், தந்தி, தும்பி (துளையுள்ள கையை உடையது), தும்பு, தூங்கல், தோல்,நாக, நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது), புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது), புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது), பெருமா (பெரிய விலங்கு), பொங்கடி (பெரிய பாதத்தை உடையது), போதகம், மதகயம், மதாவளம், மதோற்கடம்(மதகயத்தின் பெயர்), மந்தமா, மருண்மா, மாதங்கம், யானை/ஏனை (கரியது), யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்), வயமா, வல்விலங்கு, வழுவை (உருண்டு திரண்டது), வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது), வேழம் (வெள்ளை யானை)
பெண் யானையின் பெயர்கள்
அத்தினி, அதவை, கரிணி, பிடி, வடவை
யானைக்கன்றின் பெயர்கள்
கயந்தலை, கயமுனி, களபம், துடியடி, போதகம்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…