என் கண்ணம் பிடித்திழுத்து
கண் நேர்பார்த்து
கடவுள் மொழியில் கதைக்கிறாய்…
உன் உதட்டசைவிலும்
கண்ணொழியிலுமே..
கட்டுண்டு போகிறேன்..
ஏதேதோ மொழிந்து,
கை தட்டி… சிரிக்கிறாய்..
ஒன்றுமே புரியாவிட்டாலும்
உன்னுடன் சேர்ந்து நகைக்கிறேன்
உனக்கேற்ப முகபாவனைகள்
கூட்டுகிறேன்..
அதுசரி..,
என் கருத்தனைத்தும்
உன் குரலில் வியந்து..
பேசும் முயற்சியில் மகிழ்ந்து
உன் பாவனைகளில்
நெகிழ்ந்திருக்கையில்..
நீ என்ன மொழி
பேசினாலும்…
நின் கிள்ளை மொழியில்
தொலையத்தானே
போகிறேன்…
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…