மந்திரம் – 8
அதிர்ச்சியில் நின்ற அனைவரும் , நடந்ததை இன்னும் நம்பமுடியாமல் நிற்க , உறைந்து நின்ற துஜாவிற்கு சினம் தலைக்கேறியது . “சீ …நீயும் ஒரு ஆம்பளையா ?” என்று அவனை உதாசீன படுத்தியவள் , அவன் கட்டிய தாலியை கழட்ட முற்பட , அவள் கையை பிடித்து தடுத்தான் வசீ . அவன் பற்றி இடம் சிவக்க , வலியில் துடித்தாள் துஜா .
வசீயின் தோளை அழுத்தமாக பற்றி அவனை தன் பக்கம் திருப்பிய துரை , திருப்பிய வேகத்தில் அவன் கன்னத்தில் அறைந்தார் . ” டேய் ..மனுசனா டா நீ ..விடுடா என் பொண்ண ..பாவி …எங்க சந்தோசத்த நாசம் பண்ணனும்னே வந்தியா டா ?” என்று கேட்டு கொண்டே மீண்டும் அவர் அவனை அரைய முற்பட , லாவகமாக அதை தவிர்த்தான் வசீ .
வெளியே ஒரு அரவம் கேட்டது . சத்தத்தை கேட்டதுமே அங்கு இருந்தவர்கள் அனைவருக்குமே மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டது புரிந்தது . என்ன சொல்லி சாமளிப்பது என்றவர்கள் கையை பிசைந்து கொண்டு நிற்க , அவர்களை முந்தி கொண்டு , துஜாவையும் இழுத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றான் வசீ .
உள்ளே நுழைந்து கொண்டிருந்த அத்தனை தலைகளும் பிரேக் போட்டது போல நின்றது . உரிமையாக அவளை அவன் பற்றி இருந்த விதமும் , அவள் கழுத்தில் தொங்கிய தாலியும் அவர்களுக்கு ஆயிரம் கற்பனைகளை தோற்று வித்தது . நடந்ததை விளக்க துரை வாய் திறக்க , கை நீட்டி அவரை நிறுத்தினார் அந்த ஆத்தாக்கிழவி . துஜாவின் வசம் துளை இடும் பார்வையை வீசியவர் “இவன் தான் அந்த வசீயா ?” என்று வினவினார் .
“இவருக்கு எப்படி என் பெயர் தெரியும் ?” என்று மனதிற்குள் அவன் குழம்ப , அனைவரின் முகத்திலும் துஜாவின் பதிலுக்கான எதிர்பார்ப்பு இருந்தது .இப்படி ஒரு நிலை வரும் என்று அறியாமல் அவர்கள் முன் கற்பனையாக அவள் உரைத்தது நடித்தது எல்லாம் ,இப்போது நிஜமாகி கொண்டிருப்பதை உணர்ந்தாள் துஜா . நுணலும் தன் வாயால் கெடும் ..என்பது அவள் விசயத்தில் உண்மையாகி கொண்டிருப்பதை அவளால் ஏற்க முடியவில்லை .
அவளது மௌனம் அவர்களை உலுக்கியது . ” என்னமா ? அவங்க கேக்கறாங்களா பதில் சொல்லுடி ?” என்றவள் தாய் அவளை இடிக்க , சட்டென்று பொய் சொல்ல வராமல் “ஆமாம் ” என்று சொல்லிவிட்ட துஜா , சொன்னதின் அர்த்தம் புரிந்ததும் நாக்கை கடித்துக்கொண்டாள் .
“விளையாட்டு பொண்ணு ..பொய் சொல்றன்னு நெனச்சது எங்க தப்பு தான்” என்று சொல்லி பெருமூச்செறிந்தார் மாப்பிள்ளையின் தந்தை . கலங்கிய கண்களோடு துஜா அவர்களை நிமிர்ந்து பார்க்க , அவன் நின்றுகொண்டிருந்தான் . அவன் , அவள் மனம் கவர்ந்தவன் ..புகைப்படத்திலேயே அவளை வசியம் செய்தவன் ..ஆனால் அவன் கண்களில் என்ன பாவம் அது ? யாரை இவ்வளவு அருவறுப்போடு நோக்குகிறான் ? தன்னை தானா ? ஆனால் ஏன் ? அவளுது மணிக்கட்டு வலித்தது . ஒ இவன் என்னை பற்றி இருப்பதாலா ? நான் தவறு செய்யவில்லையே ? அவனது ஆசைக்கு என் கனவுகள் பலியாக வேண்டுமா ?
துஜாவின் குடும்பத்தின் கெஞ்சல்கள் ஏதும் வந்தவர்களை தடுக்கவில்லை . திரும்பி பார்க்காமல் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர் . சாருவுக்கு குற்ற உணர்வாக இருந்தது .”ஒருவேளை அவனிடம் அவள் பற்றிய செய்தியை கூறாமல் இருந்திருந்தால் , இப்படி நடந்திருக்காதோ ? அவனுக்காக பாவம் பார்த்தது தவறோ ? ” என்று எண்ணாமல் இருக்க அவளால் முடியவில்லை .
வேகமாக உள்ளே நுழைந்த பத்மா , ஆத்திரத்திலும் அவமானத்திலும் துஜாவை அடிக்க , குறுக்கே வந்து விழுந்தான் வசீ . ஆங்காரத்தில் அவனை தள்ளி விட்டவர் ” காதலிக்கறேன்னு முன்னமே சொல்றதுக்கு என்னடி ? எப்படி எங்களை அசிங்க படுத்தீட்டியே ?” என்று அழ , ” வாய மூடு பத்மா ,நம்ம துஜா அப்படி பட்டவ இல்ல …இவன் ..இந்த ராஸ்க்கல் ..இவன் தான் எல்லாத்துக்கும் காரணம் ” என்று அவனை வெறித்துப்பார்த்தார் .
சூழ்நிலையை உணர்ந்த சாருவும் , வசீகரன் குறித்து அனைத்தையும் சொல்லி பத்மாவை தேற்ற , உண்மையை அறிந்து அவனின் செயலுக்கான காரணத்தையும் யூகித்து கொண்ட துரை , யோசனையோடு அவனை பார்த்தார் .
அழுகையோடு அண்ணியின் தோள்களில் சாய்ந்து நின்ற மகளை எழுப்பியவர் , ” கவலைப்படாத கண்ணா ..உன் இஷ்டம் இல்லாம இவன் பண்ணது கல்யாணமே இல்ல ..இவன கோர்ட்டுக்கு இழுத்து என்ன செய்யறேன் பாரு ?” என்று துரை மொழிய, ” என்ன பேசறீங்க நீங்க …இந்த நாசமா போனவனாலா ..நம்ம பொண்ணு பேரும் ஊரெல்லாம் நாரனுமா ?” என்று அவரை அதட்டினார் பத்மா .
கோவமாக வசீ ஏதோ சொல்ல வாய் திறக்க , ” அப்பா ..அம்மா ..நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம் ..எதுவும் செய்யவும் வேண்டாம் ..இனி என் வாழ்க இவரோட தான் ..நா இவர் கூட போகிறேன் …” என்று உறுதியாக கூறியவளை கண்டு வசீயே அதிர்ந்து விட்டான் .
“என்னமா ? நீயும் ஒளர ?” என்றவர் ஆற்றாமையோடு வினவ , பதில் சொல்லாமல் தனது அறைக்குள் சென்று விட்டால் துஜா .வெளியே வந்தவளின் கைகளில் இருப்பைகள் இருந்தது .
ஒருபையை வசீயின் கைகளில் திணித்தவள் , அவர்கள் சொல்ல சொல்ல கேட்காமல் அவனோடு வண்டியில் புறப்பட்டுவிட்டாள் .
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…