மந்திரம் – 7
வசீக்கு அவன் கேட்டதை நம்பவும் முடியவில்லை , நம்பாமல் இருக்கவும் முடியவில்லை . ஒரே நாளில் இப்படி அனைத்துமே தலைகீழாக மாறும் என்று கொஞ்ச நேரத்திற்கு முன் யாரவது சொல்லி இருந்தால் கூட அவன் நம்பி இருக்க மாட்டான் . ஆனால் மாறிவிட்டதே ? இதோ நாளை அவனது துஜாவிற்கு வேறு ஒருவனோடு நிச்சியம் ….இத்தனை நாட்களாய் எந்த பெண்ணையும் பார்த்து காதல் கொள்ளாத அவன் மனம் ..எதற்காக இவள் வசம் சாயவேண்டும் ? காதலின் வலியை அவனுக்கு உணர்த்தவா ? கடவுளே ..இதற்காக தான் அவளை என் கண்முன் காட்டினாயா ?
மெளனமாக கண்ணீர் வடித்த இதயத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க பெரும் பாடுபட்டான் வசீ . முக்கியமாக அவன் தங்கைக்கும் அன்னைக்கும் தெரியாமல் மறைப்பது அவ்வளவு சுலபம் இல்லையே ? அவன் முயற்சிகள் அனைத்தையும் தவிடுபொடி ஆக்குவது போல , “என்னடா கண்ணா ..ஏன் ஒரு மாறி இருக்க ?” என்ற அவனது தாயின் கேள்வி அமைந்தது . அவருக்கு பதில் சொல்ல முடியாதவன் ..”வேல ஜாஸ்தி மா ..தல வலி ” என்று அவர் கண்ணை பாராமல் கூறிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டான் .
கட்டிலில் தலை சாய்த்தவனுக்கு ,காணும் இடம் எல்லாம் அவள் முகமே தோன்றியது .
காற்றாய் என் சுவாசம் நிறைத்தவளே !!
கண் சிமிட்டும் நேரத்தில் காணாமல் போனதேனோ !!
சுவாசம் இல்லையேல் ..
என் ஜீவன் ஏதடி??
தன்னுள் தோன்றிய வரிகளை நினைத்து அவனுக்கு உள்ளம் எல்லாம் கசந்தது . எழுந்து சென்று அந்த “என் ஆசை தேன்மிட்டாய்க்கு ” நோட்டை எடுத்து புரட்டினான் . மெளனமாக அதை மூடி வெய்தவனுக்குள் ஒரு முடிவு இருந்தது . அவன் காதல் ஏன் மடிய வேண்டும் ? துஜா அவனுக்கு மட்டும் தான் சொந்தம் …அவனுக்காக பிறந்து வளர்ந்தவள் அவள் …விதியே நினைத்தாலும் இதை மாற்ற முடியாது .
அடுத்த நாள் காலை , சீக்கிரமே கிளம்பி வெளியே சென்றவனை விசித்திரமாக பார்த்தாள் ரதிமலர் . அவன் நேராக சென்றது துஜாவின் வீட்டிற்கு . விசேஷ வீட்டுக்கான அனைத்து பொருத்தங்களும் அங்கு இருந்தது . வீட்டின் முன் வாழைமரம் கட்டப்பட்டு , சாணி மொழுகிய வாசலில் அழகாக வண்ண கோலம் இட்டு ,சிச்சிலரின் ஏவல் குரல்களோடு வீடே பரபரப்பாக இருந்தது .சாருவும் அந்த வீட்டினுள் செய்வதை வெளியில் நின்று பார்த்தான் வசீ .
நெறய கும்பல் இல்லை. நேராக அவன் வீட்டினுள் செல்ல , “யாருப்பா நீ ?” என்றபடி அவன்முன் வந்து நின்றார் துரைமுருகன் . “சாருவோட சொந்தம் சார் , என் வண்டி சாவிய மாத்தி தூக்கிட்டு வந்துட்டா ” என்றவன் பிசிறில்லாமல் கூற , “ஒ அப்படியா ?” என்றுவிட்டு அவர் நகர்ந்துவிட்டார் .
தன் கணவன் யாரிடமோ பேசி செல்வதை கண்ட பத்மா , அவரை நிறுத்தி “யாருங்க அந்த தம்பி ?” என்று வினவ “சாரு சொந்தமாம் டி ” என்று சொல்லிவிட்டு அவர் நகர முற்பட்டார் . அவரை போக விடாமல் தடுத்தவள் , “சாரு சொந்தமா ? அவளை நமக்கு எத்தனை வருசமா தெரியும் ? இந்த பையன அவ கல்யாணத்துல கூட நான் பார்கலையே ?” என்றவர் யோசித்துக்கொண்டே கேட்க , “அம்மா ” என்ற துஜாவின் அலறல் சத்தம் கேட்டது .
“என்னமா ?” என்று பதறி அடித்துக்கொண்டு பத்மாவும் துரைமுருகனும் ஓட , “என்னாச்சு டி ? ” என்றபடி அபியோடு சாருவும் ஜானவியும் ஓடி வந்தனர் .
துஜாவின் அறைக்கதவை திறந்த அனைவரும் , ஸ்தம்பித்து நின்று விட்டனர் . அங்கே துஜாவின் கழுத்தில் தாலியை கட்டி முடித்திருந்தான் வசீ .
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…