மந்திரம் -1
“அண்ணா எனக்கு அஞ்சு ரூபாய்க்கு மட்டும் இன்னிக்கு தேன்மிட்டாய் குடுங்கண்ணா ” என்ற அந்த குரலில் சட்டென திரும்பி பார்த்தான் வசி என்னும் வசீகரன் .
பெயருக்கு ஏற்ற வசீகரமான தோற்றம் ..அவன் தோற்றம் மட்டும் வாசிகரமானது அல்ல ..அவன் பேச்சும் தான் , அது அவனோடு பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும் .ஒரு தனியார் நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜராக அவன் பணியில் சேர்ந்து இரண்டாண்டு ஆகி விட்டது .அளவான குடும்பம் .அன்பான பெற்றோர் , அழகான தங்கை .குறை இல்லாத வாழ்வு. அவனை பொறுத்தவரை .
“மருமகள் வந்தால் தான் எங்கள் குறை தீரும் ” அவனது பெற்றோர் அடிக்கடி புலம்புவது இதை தான் .
அவன் அழகு தங்கை ரதிமலர் கூட அவனிடம் அடிக்கடி நச்சு செய்வது “அண்ணி வேண்டும் ” என்ற புராணத்தை தான் .
அன்று காலையும் உணவருந்தும் போது , அவன் தாய் மணிமேகலை தன் புலம்பலை தொடங்கி விட , சிரித்து அவரை சமாளித்து விட்டு தான் வந்தான் வசி .
அந்த போராட்டத்தில் ஒழுங்கானப்படி உணவு உள்ளே செல்லாததால் , பசிக்கும் வயிற்றை குளிர்விக்க குளிர்பானம் வாங்க அவன் அந்த கடையினுள் புகுந்த போது தான் , இந்த குரல் அவனின் கவனத்தை ஈர்த்தது .
ஒரு அழகான குட்டி தேவதையை எதிர்பார்த்து அந்த குரலுக்கு உரியவளை நோக்கியவனுக்கு அங்கு நின்றுகொண்டிருந்த அந்த வளர்ந்த தேவதையை கண்டு , ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டது .
சாதாரணமான நூல் சேலை தான் . அதிகமான ஒப்பனைகள் இல்லாத அழகான நிர்மலமான முகம் . துரு துரு வென்ற கண்களும் கொழுகொழு கன்னமும் அவனுக்கு அவளை குழந்தையாகவே நினைக்க வைத்தது .
அதிலும் அவள் கேட்ட தேன் மிட்டாய் ? வளர்ந்த குழந்தை என்றெண்ணி சிரித்து கொண்டான் வசி. அவன் தனியாக சிரிக்கவும் அவனை விசித்திரமாக ஒரு பார்வை பார்த்து வைத்தால் அவள் .
“லூசாப்பா நீ ?” என்பது போன்ற அந்த பார்வையில் , தன்னையும் சுற்றத்தையும் சுதாரித்துக் கொண்டான் வசி .
அதற்குள் அந்த கடைகாரர் ” என்னம்மா ஆச்சு ? எப்போவும் பத்து ரூவாய்க்கு வாங்குவ ?” என்று விசாரிக்க , ” நளினி ஊருக்கு போய்ட்டாணா ..அதுனால இன்னிக்கு எனக்கு மட்டும் தான் ..” என்றவருக்கு பதில் கூறியவள் ,அவர் மடித்து குடுத்த பொட்டணத்தை வாங்கி கொண்டு கிளம்பினாள் .
“யாரிந்த தேன்மிட்டாய்காரி ?” என்று தன்னையும் அறியாமல், மைன்ட் வாய்ஸ் என்றெண்ணி அவன் சத்தமாக முணுமுணுக்க , அவனை குறுகுறுவென நோட்டமிட்டார் , அந்த கடைக்காரர் .
அவரது பார்வையில் சற்றே வெட்கியவன் , பாதி பானத்தை அப்படியே வைத்துவிட்டு ,அங்கிருந்து நடையைக்கட்டினான் .
அன்று முழுவதும் வசியின் எண்ணம் எல்லாம் அவனை வசீகரித்த அந்த தேன் மிட்டாய்க்காரியின் பின்னேயே சுற்றியது .
“யாரவள் ? எங்கிருக்கிறாள் ? அவளுக்கு மணமாகி இருக்குமோ ? ஒரு வேலை யாரையாவது அவள் காதலித்தால் ? எப்படி அவளை கண்டுபிடிப்பது ? நாளையும் அந்த கடைக்கு அவள் வருவாளா ? வருவாள் வருவாள் …அந்த கடைக்காரரிடம் அவள் பேசியதை பார்த்தால் , அவள் அங்கு தினமும் வருவாள் என்று தான் தோன்றுகிறது ….எப்படியும் நாளையும் அவளை கண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் ….தினமும் கண்டால் ?” அவனையும் மீறி பெருமூச்சொன்று வெளியேறியது .
அதே நினைவோடவே உறங்கிய வசி , அடுத்த நாளும் அதே நேரத்திற்கு அதே கடையின் முன் டாணென்று ஆஜர் ஆனான் .
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…