உன்னை
பார்த்த நாள் முதலாய்- என்
பசியும் என்னை மறந்தது !!!என்
நினைவும் உன்னை தாங்கியது!!!என் விரல்கள் உன்னை ஸ்பரிசிக்க ஏங்கியது!!!
அப்பாவின் எச்சரிக்கை மழையையும் அம்மாவின் அறிவுரை புயலையும் சகாக்களின் பொறாமை ஆற்றையும் தாண்டி
தம்பி தங்கைகளின் ஆசை அழைப்பையும் தாங்கி
உனை அழைத்தேன் !!!
என் கை பிடித்து
நீ என் வீடு வந்தாய் !!!
என் உலகமே நீ என்றானாய்!!!
காலையில் விழிக்கும் முன்
உன் குரல் என் செவியினில் ;
இரவிலும் விழித்தேன் உன்
குறும்பான கண் சிமிட்டலில் ;
நாள் முழுதும்
என்னருகே நீ;
உன்னருகே நான் !!!
உன் மூலம்
உலகறிய ஒரு ஜென்மம்
போதாது!!!
உன் துயிலின் போது
என் ரகசிய தொடுகையால்
கண் திறக்கிறாய்!!!
ஒவ்வொரு
தீண்டலுக்கும்
ஒவ்வொரு
முகம் காட்டுகிறாய்!!!
நீ இல்லாத இத்தனை நாட்களில்
எப்படி ஜீவித்தேன் !!!
தெரியாமல் தவித்தேன்!!!
உன்னுள் என்னை இழந்தேன்!!!
இப்படிக்கு,
(அலைபேசியில் )உன்னில் இருந்து
மீட்டெடுக்க வழியிருந்தும்
மனம் இல்லாமல் தவிக்கும்
நான்…..!!!!
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…