கல்லூரியில் கடைசி நாள் தேர்வு முடிந்து பலரும் தங்களுக்குள் இருக்கும் பாசத்தை பொழிந்து கொண்டிருந்தனர்.
சிவா மட்டும் தான் பல நாட்களாக கொடுக்க நினைத்த காதல் கடிதத்தை எடுத்துக்கொண்டு நிவேதாவை தேடிச்சென்றான்.
இரண்டு ஆண்டுகள் சொல்ல நினைத்து பயத்தால் ஒருதலை காதலாகவே மனதோடு இருந்த காதல் வெற்றி பெற வேண்டும் என்பது அவன் எண்ணம் இல்லை. சொன்னால் மட்டும் போதும் என்பதே..
நிவி, “நான் உன்ன லவ் பண்றேன். இந்தா..” என்று கடிதத்தை நீட்டினான்.
“நீங்க என்னை ஒன்றரை வருசத்துக்கும் மேல பாலோ பண்ணுறீங்கனு தெரியும். ஆனா நீங்க சொல்லவே இல்லை காதலை. அதனால …..!!!” என்று இழுத்தாள்.
“எதுவா இருந்தாலும் சொல்லு நிவி. ப்ளீஸ்…”
“உங்க ப்ரண்ட் அசோக் கூட நேத்து தான் நான் கமிட் ஆனேன். அதனால உங்க காதல ஏத்துக்க முடியாது அண்ணா” என்றாள்.
கூடவே இருந்து ஒன்னத்தையும் சொல்லாம விட்டுட்டானே என்று இதயம் நொறுங்கி போனது அவனுக்கு.
- சேதுபதி விசுவநாதன்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…