தேவை:
ப. அரிசி : 1கப் (200கிராம்)
பு. அரிசி : 1கப் (200கிராம்)
துவரம் பருப்பு : 1 கப் (200கிராம்)
உளுந்து : 2 தே. கரண்டி
சின்ன வெங்காயம் : 10
காய்ந்த மிளகாய் : 5
ப.மிளகாய்: 3
மிளகு : 8
சீரகம் : கால் தே.கரண்டி
தேங்காய் : கால் முடி
கருவேப்பிலை : ஒருகொத்து
பெருங்காயம், உப்பு சுவைக்கேற்ப
இது ரொம்ப சீக்கிரமா செய்யலாம் ஒரு அரைமணிநேரம் போதும்.
அரிசி பருப்பு ஒன்றாக சேர்த்து நன்கு களைந்து 25 நிமிடம் ஊறவைக்கவும்.
மிக்ஸியில் அரிசி பருப்பு, 2 மிளகாய் வகை, தேங்காய், வெங்காயம், மிளகு சீரகம், க.வேப்பிலை, உப்பு பெருங்காயம் எல்லாம் சேர்த்து
நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தோசை மாவு பதத்திற்கு கரைத்து தோசை வார்க்கலாம்.
இதை சூடாக சாப்பிட மிக மிக நன்றாக இருக்கும்..
குறிப்பு:
1.நான் இரண்டு அரிசியும் சமமாக சொல்லி இருக்கிறேன். ப.அரிசி அரைகப், பு. அரிசி 1.5 கப் போட்டாலும் நன்றாக இருக்கும்.
4.ப.மிளகாய், கா. மிளகாய் மிளகு மூன்று வேண்டாம் என்றால் வெரும் காய்ந்த மிளகாய் 10 மட்டும் கூட உபயோகிக்கலாம்.
5.சின்ன வெங்காயம் இல்லையென்றால் பெரிய வெங்காயம் 1 சேர்க்கலாம். வெங்காயம் தவிர்த்தும் அரைக்கலாம்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…