மாலை 7 மணி ஒரு விதமான புகைப்படம் மூட்டத்துடன் மையிருட்டு ஆரம்பமாகிறது கொண்டு இருந்தது இரண்டு பேர் முகமூடியுடன காக்கி உடையில் வந்து இறங்கினர். அரசாங்கத்தின் உயர் பொருப்பில் இருப்பவர்கள் என்பது அவர்களின் உடையில் தெரிந்தது இன்னும் எத்தனை குடும்பம் இங்கே குடி இருக்காங்க. இன்னும் ரெண்டு சார். ஏன்யா இன்னும் கிளம்பாம நம்ம உயிரை எடுக்கறாங்க. இது அவங்களோட சொந்த ஊரு வினோ சார். கோபமாக என்ன சொந்த ஊரு குடிக்க தண்ணீர் இல்ல பாலைவனபூமி எந்த இடத்தில் பூமி துளை ஆகி கேஸ் வரும்ன்னு தெரியலை. காற்றும் சுத்தமானதா இல்ல இன்னும் எத்தனை நாளைக்கு மாஸ்க் போட்டுகிட்டு நடப்பாங்க. ஊரை காலி பண் ண சொல்லி ஆர்டர் வந்து ஒரு வாரம் ஆச்சு நாளையில் இருந்து இந்த ஊருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரும் வராது தண்ணீரும் வராது மாஸ்க்கும் கிடைக்காது என்ன பிடிவாதம். இங்கேயே இருந்து சாக போறாங்களா. பதில் சொல்ல முடியாமல் நெளிந்தார் திவாகர். ‘ மொத்தம் எத்தனை பேர் இருக்கறாங்க. மொத்தம் பத்து பேர் சார். ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணிடு. கூடவே ஹெல்ப்க்கு பத்து போலீஸ்ஸை வரச் சொல்லு . இன்னெக்கு நைட்க்குல்ல எல்லாத்தையும் அப்புறப்படுத்தி ஆகனும்.
இவங்களை சாகவா சொல்லறொம் ஆயிரம் கிலோமீட்டர் ஆந்தபக்கம் இருக்கற பக்கத்து ஸ்டேட்க்கு தானே போக சொல்லறோம். இப்படி இருக்கறாங்க. ஹிஸ்டரிய பாரு விவசாயம் நடத்த பூமியாம். பார்த்தால் யாராவது நம்புவாங்களா. சரி நான் கிளம்புறேன். வண்டி வந்ததும் கிளியர் பண்ணிட்டு நியும் கிளம்புநாளைக்கு பார்க்கலாம். டேய் மணி பத்து இன்னும் என்ன துக்கம் எந்திரிடா நைட் பன்னிரெண்டு மணி வரைக்கும் டிவி பார்க்க வேண்டியது முதுகில் அடி வேகமாக விலுந்தது . அம்மா நான் ஊரை விட்டு போக மாட்டேன்.
மீத்தேன் ஹைட்ரொகார்பன்.புகை இருட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்
உன்னை எங்கேயும் போக சொல்லலை
எந்திரிடா.
அம்மா நான் கிளம்பறேன்மா.
எங்கடா.
இது என் ஊர் மா அழிய விடமாட்டேன் .விவசாயிகள் போராட்டம் பண்ண போறாங்க நாணும் கலந்துக்க போறேன்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…