தேவையான பொருட்கள்
ஓட்ஸ் மாவு – 2 கப்
ரவா – 1 கப்
தயிர் – 1 கப
கேரட் – 1 நடுத்தர அளவு -துருவியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
கொத்தமல்லி இலைகள் – பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
கறிவேப்பிலை
தேவையான அளவு உப்பு
பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காய போடி – 1/4 தேக்கரண்டி
செய்முறை :
தயாராக வைத்துள்ள பொருட்களை எடுத்து கொள்ளுங்கள் .
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மாவை எடுத்துக்கொள்ளுங்கள்.
ரவா சேர்த்து கொள்ளுங்கள்
தயிர் சேர்த்து
தேவையான அளவு தண்ணீர்
தேவையான அளவு உப்பு
துருவிய கேரட்
நறுக்கிய பச்சை மிளகாய் , கொத்துமல்லி இலைகள் , கறிவேப்பிலை சேர்த்து கிளறி கொள்ளவும்
தாளிக்க ஒரு சின்ன கடாயில் என்னை ஊற்றி சூடானதும்
சீரகம் ,கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து
அதோடு பெருங்காய போடி சேர்த்து கொதித்ததும்
இட்லி கலவையில் ஊற்றி
நன்றாக கலந்து கொள்ளுங்கள்
கலவை கெட்டியாக இருந்தால்
கொஞ்சம் தண்ணீர் சேர்த்து
இட்லி பதத்துக்கு வந்ததும்
பேக்கிங் சோடா 1/2 தேக்கரண்டி
சேர்த்து
நன்றாக கலந்துகொள்ளவும்
இட்லி தட்டில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து
இட்லி கலவையை அதில் அளவாக ஊற்றி
இட்லி பாத்திரத்தில் வைத்து
8 அல்லது 10 நிமிடங்கள் வேக விட்டு
வெந்ததும் இறக்கி ஆறவிட்டு
தண்ணீரில் நனைத்த கரண்டியால்
இட்லியை பிரித்தெடுக்கவும்
இட்லி ரெடி…
:pray::pray::pray::raised_hands::raised_hands:
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…