சின்ன சிரிப்பினிலே
என் சித்தம் கலங்கடித்தாய்!!
ஒற்றை அணைப்பினிலே
என் உயிரை உருக வைத்தாய்!!
குட்டி எட்டெடுத்து
என் பயணம் மாற்றி வைத்தாய்!!
பட்டு கரங்களினால்
என் வாழ்வில் வண்ணம் சேர்த்தாய்!!
அழகு வாயசைத்து
என் நெஞ்சம் இனிக்க வைத்தாய்!!
சொல்லாத வார்த்தைகளால்
ஒரு அகராதி படைக்க வைத்தாய்!!
கருவண்டு கண்களினால்
என் உலகை கவர்ந்திழுத்தாய்!!
செய்யும் சேட்டைகளால்
என்னை வியக்க வைத்தாய்!!
அறியாத செய்கைகளால்
என் இருப்பை தெளியவைத்தாய்!!
உனை சேயாக ஈன்றெடுத்தேன்..
தாய்மையை பரிசளித்தாய்!!
கடுந்தவங்கள் புரியவில்லை..
கண்ணீரில் கரைந்ததில்லை..
எனினும் வரமாய் கைசேர்ந்த்தாய்!!
என் உலகை உயிரை
உன்னுள் ஒளித்து வைத்தாய்!!
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…