உள்ளத்தினுள்ளே மத்தாப்பு வெடிக்கிறது….
அது இதழ்கடையில் புன்னகையாய் மிளிர்கிறது அவளறியாமலே!!
சின்னஞ்சிறு மாற்றங்களும் தப்புவதில்லை…
நேசத்தின் வழியாய் பார்க்கும் விழிகளுக்கு!!
எதிர்படும் அனைத்து முகங்களும்
அன்பையே தருகின்றன ….
அதனாலேயே அவ்விடத்தின் மீதான
அதீத காதல் குறைவதில்லை!!
இரவின் அலுப்பும் அதிகாலை பரபரப்பும் ஓடி ஒளிகின்றன…
எட்டி நின்ற நித்திரை சுகமாய் தழுவி தன் ஏக்கம் தீர்த்துக் கொள்கிறது!!
அடுப்படி சலசலப்பும் அலுவலக கசகசப்பும் பிள்ளைகளின் நசநசப்பும்…
காதுகளை எட்டாமல் கரைந்து போகின்றன!!
பொறுப்புகளும் கவலைகளும் தணலில் வெந்து தணிகின்றன…
பட்டாம்பூச்சியாய் சிறகு விரிந்து
பனியாய் உருகுது இதயம் ❤️!!
பேரண்டமாய் அச்சுறுத்தும் துன்பங்களும் …
ப்ரோட்டான்களாக மாறி
கண்மறைந்து போகின்றன!!
சில நாட்களிலே வருட
முழுதுக்குமான சக்தி பெருகிறாள்..
வாழ்வின் மகிழ்ச்சி காண்கிறாள்!!
மீண்டும் குழந்தையாகிறாள்…
தாய் மடி சாயும் சுகம் காண்கிறாள்…!!
அவள் வீடாய் / ஊராய் இருந்து…
அம்மா வீடாக / ஊராக மாறின
தலம் சேரும் போது!!
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…