சூரியன் ஒரு நாள் கூட நீ உறங்கி பார்த்ததில்லை….
நிலவிற்கோ அரையிரவு கடக்கும் வரை உடனிருக்கும் தோழி நீ…
சரியான வேளைவில் நீ உண்டு பார்த்ததில்லை நாங்கள்…
நன்னாளில் அழகாய் அணிந்து
வளைய வரக் கண்டதில்லை ஊரும்..
உழைத்து உழைத்து
காப்பு காச்சிய கைகள்…
ஓடி ஓடி பித்தவெடிப்புகளுடன்
தேய்ந்து போன கால்கள்…
எங்கள் எதிர்காலம் எண்ணி எண்ணி
நிகழ்காலம் தொலைத்த
இளநரை தலை…
கனிவை மட்டுமே காட்டத்
தெரிந்த கண்கள்…
அன்பை மட்டுமே தரும் உதடுகள்..
தியாகத்தை மட்டுமே அறிந்த மனது..
எல்லாருக்கும் அன்னை உண்டு…
எனினும் உன்னுடன் ஒப்பிட
ஒருவரும் பிறக்கவில்லையே..
எண்ணற்ற தியாகங்களால்
எங்களை வளர்த்து ஆளாக்கினாய்..
இன்றும் என்றும் எங்கள்
நலனன்றி வேறு கேட்டதில்லை
இறைவனிடம்…
என்ன கைம்மாறு செய்ய முடியும்?
என்னை ஈன்றெடுத்த வலிக்கு கூட
ஈடு செய்ய இயலாது எனும்போது..
என்றும் உன் அன்பை
நெஞ்சில் இருத்தி..
உனைப்போலவே அன்பு செலுத்த
முயலுவதை விட வேறேதும் செய்ய இயலாது..
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…