உயிரே என் உலகமே 19

0
1235

உயிரே என் உலகமே 19

அத்தியாயம் 19

அண்ணா நா சொல்றத கேளு… என்று கவி தன்னிலை விளக்கம் கூற ஆரம்பித்தான்… எனக்கு சின்ன வயசுல இருந்து போலீஸ் ஆகணும் ஆசை.. யூ பி ஸ் சி எக்ஸாம் எழுதினேன்… போஸ்டிங் கிடைத்தது… நான் ஒரு சிக்கரேட் சி ஐ டி ஆஃபீஸ்ர் தீவிரவாத தடுப்பு பிரிவில் ஒர்க் பன்றேன்… 2 வருடமா சைபர் கிரைம் மூலம் சில நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பின் தொடர்ந்தோம்..

அப்படி தான் ஒரு நாள் சலீமை பார்க்க போகும்போது அவன் அவனோட பொண்ண அண்ணி கிட்ட ட்ரீட்மெண்ட் கூட்டிட்டு வந்தான்.. நா அப்போ அண்ணி ய சரியா கவனிக்கல ..
உங்க கல்யாணத்து அப்போ அண்ணி ய பார்க்கும் போது எங்கயோ பார்த்தது போல தோணுச்சு.. அன்னைக்கு அண்ணி அவுங்களோட மொபைல கேணத்துல போட்டதும் எனக்கு அவுங்க மேல சந்தேகம் வந்துச்சு… அப்றம் அவுங்க சூட்கேசை அதுல நம்பர் லாக் போட்டு வச்சி இருந்தாங்க.. அப்புறம் அவுங்க ஒரு நாள் உங்க கிட்ட பொய் சொன்ன போது அவுங்க ஏதோ பெரிய பிரச்சனை ல இருக்கங்கன்னு புரிஞ்சிது.. ஒரு நாள் அவுங்க மரச்சி வச்ச இன்ஜெக்ஷன் ஆஹ் பார்த்தேன்.. அப்போவே அது என்னனு விசாரிச்சி தெரிஞ்சிகிட்டேன்… அவுங்களுக்கு பாரத ரத்னா விருது குடுக்கும் போது அவுங்க டாக்டர் என்று தெரிஞ்ச ஒடனே நா அண்ணி ய பத்தி என் பிரண்ட்ஸ் கிட்ட சொன்னேன்.. அவுங்க தான் இது எல்லாத்தையும் சொன்னாங்க..

சரி டா சலீம் எப்படி எதனால் இறந்தான்.. என்று தேவா கேட்க

அண்ணா ஒரு வகையில அண்ணி தப்பிக்க சலீம் ஒரு காரணம்.. அன்னைக்கு அவன் தான் அண்ணிய தப்பிக்க வச்சியிருகான்..
அண்ணியோட கை கட்ட அவுத்து விட்டதும் இல்லாம அந்த கதவ அவன் லாக் பண்ணாம போய் இருக்கான்…

அது எல்லாத்தையும் தெரிஞ்சி அவனை பிளான் பண்ணி கொன்னுடாங்க..

மகி கவியிடம்.. அண்ணா டார்லிய கண்டுபுடிக்க முடியும்ல..

கண்டிப்பா டா..

இப்போ அவுங்க எங்க இருப்பாங்க..

தெரில்ல டா கண்டிப்பா அவன் அவுங்களை இந்தியா விட்டு கொண்டு போயிருப்பான்

அவுங்க இப்போ எங்க இருக்காங்கனு தேடனும் பிரஸ்ட்…

இனியன் எதுவும் பேசாமல் அமைதியவே இருக்க.. தேவா அவனிடம் மாப்பிள்ளை என்னடா எதுவும் பேசாமல் இருக்க..

பயப்படாத டா இசைய கண்டு புடிச்சிடலாம்..

என் யாழ்க்கு ஒன்னும் ஆகாது… ஆனா அவனை நா சும்மா விடமாட்டேன்.. என் கையால் தான் அவனுக்கு சாவு என்று நிதானமாக இனியன் கூற.. இனியனின் நிதானம் அங்கு இருக்கும் அனைவருக்கும் ஆச்சிரியமாக இருந்தது…

மேலும் அனைவரும் உடனடியாக சென்னை புறப்பட்டனர்..

கவி தன் குழுவை சேர்ந்த மற்றவர்களுக்கு இசை கடத்தப்பட்ட செய்தியை அறிவித்தான்…

அனைவரும் சென்னை ஸ் பி ஆஃபீஸ்ல் வெளியே இருக்க கவி உள்ளே சென்று கூறினான்.. அதை எதுவும் கண்டுக்காமல் ஏ சி பி இருக்க.. அவன் தன் மேல் அதிகாரியை தொடர்ப்பு கொண்டான்..

கவி வெளியே வர அப்போது அங்கு வந்தார் இசையின் அப்பா அரவிந்த்.. இனியனை சிறிதும் கண்டு கொள்ளாமல்.. மனோகரிடம்
நா அப்பாவே சொன்னேன் கேட்டியா .. அப்போவே அவளை பாரின் அனுப்பி இருந்தா இன்னைக்கு அவ இவளோ கஷ்ட பட்டு இருக்க மாட்டா

முதலில் யார் என்று புரியாமல் இருந்த இனியனுக்கு இப்போது புரிந்து விட்டது..
இவனை நம்பி என் பொண்ண விட்டு வந்துட்ட.. பாரு என் பொண்ணு எங்கன்னு கேளு என்று அவர் எகிற…

இன்னொரு தடவை உன் பொண்ணு உன் பொண்ணு சொன்ன கொன்றுவேன் பாத்துக்கோ… அவ என் பொண்டாட்டி அவளை எப்படி காப்பாத்னும் எனக்கு தெரியும் என்று இனியன் கத்த.. பெத்த பொண்ண எப்படி இருக்கானு தெரிஞ்சிக்கதா நீலாம் ஒரு அப்பாவா … 15 நாள் உன் பொண்ண ஒருத்தன் கடத்தி இருக்கான் அதுகூட தெரியாம இருக்க.. நீ என்ன பேச வந்துட்டா.. என்று அவன் ஆத்திரத்தில் கத்த ஆரம்பித்தான்..

நா யாருன்னு தெரியாம பேசுற என்றார் அரவிந்த்

நல்லா தெரியும்…. என் பொண்டாடியோட அப்பா..

நா இந்தியாவில் டாப் பிசினஸ் மேன்..

ஓஹ் என்றான் இனியன்

மனோகர் இனியா பெரியவங்கள இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா.. அவர் உன்னோட மாமனார் அதை நியாபகம் வச்சிக்கோ..

எனக்கு தெரியும் மாமா .. ஆனால் இவர் மட்டும் இசைய பத்திரமா பார்த்து இருந்தா இந்நேரத்துக்கு அவ என் கூட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்து இருப்பா

உன்ன மாதிரி ஒருத்தனுக்கு என் பொண்ண நா கொடுத்து இருக்க மாட்டேன்..
ஏதோ விதி என்று அவர் சொல்ல

இந்த ஜென்மம் மட்டும் இல்ல இன்னும் எத்தனை ஜென்மம் பிறந்தாலும் இசை தான் என் மனைவி

அவனின் உறுதியை கண்டு அரவிந்த் வாய் அடைந்து போனார்..

இவர்களின் பேச்சில் தென்றல் இடை புகுந்து .. மாமா என்றால் இனியனை..
அவளை பார்த்து வேறு புறம் முகத்தை திருப்பி கொண்டான்.. மாமா ஐ ஆம் சாரி..

மாமா உங்கள தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க.. அப்போ நா ரொம்ப சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டேன்..ஆனா இசை ரொம்ப லக்கி உங்களை மாதிரி புருஷன் கிடைக்க..

அவனும் சரி விடுமா என்று மன்னிக்க .. மீண்டும் அனைவருக்கும் அதிர்ச்சி… இனியனின் இந்த மாற்றம் கண்டிப்பாக இசைனால தான்..

மாமா அக்காவ இன்னும் 48 ஹர்ஸ் ல காபற்றானும். நா மெடிக்கல் ஸ்டுடெண்ட் அவளோட ரிப்போர்ட் பார்த்தேன் இன்னும் 48 ஹர்ஸ் குள்ள அவளுக்கு மாற்று இன்ஜெக்ஷன் போடலை அவ பிரெயின் டேத் ஆகிடும்.. அதாவது மூளை சாவு என்று சொல்லி அனைவரையும் பதற வைக்க..

இனியன் சிரித்து கொண்டே உன் அக்காக்கு ஒன்னும் ஆகாது … அவ கண்டிப்பா வருவா .. அவளுக்கு எங்க கூட வாழனும் ஆசை .. கண்டிப்பா வருவா. என்று இனியன் சொல்ல..

சரி அண்ணிய சீக்கிரம் தேடுவோம் என்று கவி அங்குஇருந்து அனைவரையும் அவனுடய அலுவலகத்திற்கு அழைத்து சென்றான்..

ரியாத் இசை யை ஒரு அறையில் அடைத்த வைத்து இருந்தான்.. அவள் கை மட்டும் கட்ட பட்டு இருக்க லேசான மயக்கத்தில் இருந்தால் இசை..

வாவ் இசை மேடம் உங்கள நா ரொம்ப கொறைச்சி எடை போட்டுட்டேன்.. இப்போ சொல்லுங்க அந்த பைல் எங்க…

தெரியாது என்று பதில் சொன்னாள் இசை

பொய் சொல்லாதீங்க… என்று மறுபடியும் அவனின் டார்ச்சலை ஆரம்பித்தான்… அவளின் நிகங்களை ஒவ் ஒன்றாக பிக்க ஆரம்பித்தான்.. வலி அதிகமாக ..என்னை ஏன் கொடுமை பண்ற நீ என்ன கேட்டாலும் என் பதில் தெரியாது என்பது தான்…

ஓஹ் அப்போ உங்களுக்கு தெரியாது அப்படித்தானே…

ஆம் என்று தலையை ஆட்டினாள்..கோவமாக வெளியே சென்றான் ரியாத் மேலும் அவளை எப்படி உண்மையை சொல்ல வைப்பது என்று யோசித்தான்..

எவளோ பிடிவாதம் உனக்கு எங்களோட மிஷன் கீ அந்த பெண் டிரைவ்ல இருக்கு..இல்லைன்னா இந்நேரத்துக்கு உன்ன கொன்று இருப்பேன்

கவி அவனுடைய டீம் சி சி டிவி கேமரா வில் உள்ள பதிவுகளை பார்த்து கொண்டு இருந்தனர்.. இசை மருத்துவமனையில் இருந்து
ஆம்புலன்ஸ் மூலம் கடத்த பட்டு இருக்கிறாள் ஆனால் பாதியில் அந்த ஆம்புலன்ஸ் காணவில்லை… எங்கே என்று குழம்பி னர் … பாண்டிச்சேரி தாண்டி இ சிஆர் ரோடில் அந்த ஆம்புலன்ஸ் மயமாகி இருக்க.. அப்போது இனியன் என் கவி ஒரு வேல ஹெலிகாப்டர் ல கூட்டிட்டு போயிருக்கலாம்ல..

அவனும் அவன் டீமும் ஹெலிகாப்டர் தளம் அங்கு உள்ளதா என்று பார்க்க.. ஒரு தளம் பிரதமர் காக புதிதாக உருவாக்க பட்டு இருந்தது… மேலும் இவர்கள் அந்த ஹெலிகாப்டரை ட்ராக் செய்ய முயற்சி செய்தனர்.. ட்ராக்கிங் சிஸ்டம் கருப்டேட் என்று காட்ட அகி அண்ணா நா ட்ரை பண்ணி பார்க்கட்டுமா என்று கேட்க..

அவனிடம் கம்ப்யூட்டரை கொடுக்க 5 வினாடிகளில் சொல்லி விட்டான் அண்ணா அந்த ஹெலிகாப்டர் கடைசியா ஹைதராபாத் ல தரை இறங்கி இருக்கு..

அண்ணா டார்லி அடிக்கடி என்ன காணோம் ன 44 ஹைதராபாத் 44 நாக்பூர் னு அட்ரஸ் சொல்லுவாங்க.. ஒரு வேளை அங்க இருப்பார்களோ…

இல்ல டா.. அது ஏதோ குளு மாதிரி இருக்கு.. திடீரென அகி அண்ணா அண்ணா என்று கத்த.. அனைவரும் அகி முன்னாடி சென்று என்னடா என்றான இனியன்

அண்ணா உங்க பிறந்தநாள்க்கு உங்களுக்கு ரிங் ப்ரெசென்ட பன்னேன்ல..

இப்போ அது ரொம்ப முக்கியம் பாரு என்றான் மகி

டேய் அதே மாதிரி அண்ணிக்கும் ஒரு ரிங் கொடுத்தேன் ல ..

ஆமாம் அதுக்கு என்ன..என்றான் மகி

அண்ணி என்கிட்ட ஒரு தடவ ட்ராக்கிங் பேண்ட் வேணும்னு கேட்டக்ங்க டா நா அவுங்களுக்கு ரிங் ல செட் பண்ணி தந்தேன்..

வாவ் சூப்பர் டா என்று கவி பாராட்ட..
இனியனும் அவனை பாராட்ட..

அவனும் அதை ட்ராக் செய்ய ஆரம்பித்தான்.. ஆனால் ட்ராக் செய்ய முடியவில்லை..

இனியன் என்னடா அச்சு..என்று அகியிடம் கேட்டான்

அண்ணா அந்த ரிங் பத்தி நான் அண்ணி கிட்ட சொல்லவே இல்லை.. அந்த ரிங் அஹ பிரெஸ் பண்ணனும் அப்போ தான் அது ஆக்டிவெட் ஆகும்.. அதுக்கு அப்புறம் தான் ட்ராக் பண்ண முடியும்..

இப்போ என்ன பண்றது .. அதற்குள் டிவியில் பிரபல மருத்துவர் தீவிரவாதிகளால் கடத்த பட்டுள்ளார்.. என்று ஹெட் லைன் ஓட இனியன் மட்டும் பதராமல் இருந்தான்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here